நேர்மைக்கான நடைபவனி (இரத்தினபுரி)



"நேர்மையான கலாச்சாரம் - சுத்தமான இலங்கை" என்பற்காக தேசிய சுபிலிபன் வாரம் நேற்று அதாவது 27.07.2026 அன்று ஆரம்பமானதுடன், அது இம்மாதம் 31 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படும்.
இதற்கமைய, சுபிலிபன் வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சுபிலிபன் நடைபவனி இன்று (28) இரத்தினபுரி புதிய நகரில் அமைந்துள்ள சபரகமுவ மாகாண சபை வளாகத்திற்கு அருகாமையில் ஆரம்பமாகி, இரத்தினபுரி புதிய நகரின் நீதிமன்ற சந்தியில் நிறைவடைந்தது.
நடைபவனியின் இறுதியில் இரண்டு வண்ணமயமான வீதி நாடகங்களும் அரங்கேற்றப்பட்டன.
இந்த சுபிலிபன் நடைபவனியில் சபரகமுவ மாகாண கௌரவ ஆளுநர் திருமதி சம்பா ஜானகி ராஜரத்ன, சபரகமுவ மாகாண தலைமைச் செயலாளர் திரு. உபாலி ஜயசேகர, இரத்தினபுரி மாவட்டச் செயலாளர் / அரசாங்க அதிபர் திரு. எம்.ஜி. லலித் ஆனந்த உட்பட சுமார் 500 அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மாவட்ட ஊடகப் பிரிவு,
மாவட்ட செயலகம் / அரசாங்க தகவல் திணைக்களம்,
இரத்தினபுரி.





