தேசிய நேர்மை வாரம் ஆரம்பம்!

Integrity Integrity
IntegrityIntegrity

இலங்கையின் ஒட்டுமொத்த அரசாங்க சேவையின் தரம், செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை உயர்த்துவதும், ஊழலற்ற முன்மாதிரியான நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதும் தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த இலக்கை அடையும் பொருட்டு செயற்படுத்தப்படும் "க்ளீன் ஸ்ரீலங்கா" (Clean Sri Lanka) தேசிய திட்டத்துடன் இணைந்து, அரச சேவையின் ஒழுக்கநெறி விழுமியங்களை வலுப்படுத்துவதே இந்த நேர்மை வாரத்தின் முக்கிய நோக்கமாகும்.

இதற்கமைய, “நேர்மையான கலாச்சாரம் - சுத்தமான இலங்கை” எனும் கருப்பொருளில் தேசிய நேர்மை வாரம் இன்று (2026.07.27) முதல் ஜூலை 31 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இது வெறும் ஒரு வாரத்திற்கு மட்டும் வரையறுக்கப்பட்ட கொண்டாட்ட விழா அல்ல; மாறாக, அரச சேவையின் அடித்தளத்தை நிலையானதாக மாற்றியமைக்கும் குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டத்திற்கான ஒரு தொடக்கமாகும்.

தனிப்பட்ட லாபங்களைக் கருதாது பொது மக்களின் நலனுக்கு எப்போதும் முன்னுரிமை அளித்து, ஒழுக்கநெறி விழுமியங்கள் மற்றும் கொள்கை சார்ந்த தரநிலைகளுடன் இணைந்து செயற்படும் ஒருவரே "நேர்மையான அரச ஊழியர்" எனப்படுகிறார். அவர், வேறு யாரும் கண்காணிக்காத போதும் அல்லது எந்தவொரு மேற்பார்வையும் இல்லாத போதும், சுய கட்டுப்பாட்டுடன் சரியான மற்றும் நன்னடத்தையான செயல்கள் மூலம் சிறப்பான பொதுச்சேவையை வழங்குபவர் ஆவார்.

நேர்மை வாரத்தின் முதல் நாளான இன்று (27) நாடு முழுவதிலும் உள்ள அரச நிறுவனங்களில் "நேர்மை சத்தியப்பிரமாணம் / உறுதிமொழி" வாசிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதற்கமைய, இரத்தினபுரி மாவட்ட செயலகத்திலும் நேர்மை வாரத்தை முன்னிட்டு உறுதிமொழி வாசிக்கும் நிகழ்வு, இரத்தினபுரி மாவட்டச் செயலாளர் / அரசாங்க அதிபர் திரு. எம்.ஜி. லலித் ஆனந்த அவர்களின் தலைமையில், ஊழியர்களின் பங்கேற்புடன் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (27) நடைபெற்றது.மேலும், நாளை (28) இரத்தினபுரி புதிய நகரை மையப்படுத்தி "நேர்மை விழிப்புணர்வு பேரணி" (Supilipan Walk) நடைபெறவுள்ளது.

மாவட்ட ஊடகப் பிரிவு,
மாவட்ட செயலகம் / அரசாங்க தகவல் திணைக்களம்,
இரத்தினபுரி.

செய்தி மற்றும் நிகழ்வுகள்